நேற்றிரவு மின்சாரம் அறுந்து போனது….
அடிக்கடி கிண்கிணுக்கும் அலைபேசியை அறையிலேயே வைத்து விட்டு வெளியே வருகிறேன்.
லேசாக மழை தூரல்……
சட்டென்று இறுகிப் போன முகத்தை ஒரு புன்னகை தொட்டுச்செல்கிறது.
இறைவனைப் புகழ்ந்துகொள்கிறேன்.
இறைவா
மாற்றங்களை ஏற்க மறுக்கின்ற குறுகிய மனத்தை எனக்குத் தந்து விடாதே
என் மனம் உள்ளுக்குள் இருகரமேந்துகிறது.
புதிதாக ஒன்றை செய்ய முடியாது.
சிந்திக்கக் கூட முடியாது.
அது சரிவராது…
வழமையானபடியே செய்வோமே…
இவ்வளவு காலம் இதைத் தானே செய்தோம்
இப்படியானவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது பெரிய சவால்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்புக்கடிததைத் தயாரிக்க நேரிட்டது.
நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிகழ்ச்சி.
சம்பிரதாயமான அலுவலகக்கடிததிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு அமைப்பில் கடிதத்தை வடிவமைத்தோம்.கடிதம் அழகாக வந்திருக்கிறது என்ற கருத்தில் பலர் இருக்க
அந்தப் பிரிவின் பொறுப்பாளர்கள் சிலர் இப்படி வந்திருக்க தேவையில்லை என்று அபிப்பிராயப்படார்கள்.
அவர்கள் அதற்கு சொன்ன காரணம் மிகவும் வருத்தத்தைத் தந்தது.எல்லாப் பிரிவுகளின் கடிதங்களும் ஒரே விதமாக இருக்க
இந்தப் பிரிவுக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது?
வாழ்ந்து கொண்டிருப்பது கணிப்பொறி யுகத்தில்.
ஒரு பிரிவின் செயற்பாடுகளின் தரம் அதிகம் என்றால் அதற்கேட்ப மற்றப்பிரிவுகளின் நடவடிக்கைகளின் தரத்தையும் அதிகரிப்பது தானே ஆக்கபூர்வமானது.
இப்படியான மனோநிலைகள்.
ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது என்றாலும் அது ஒரு பெரிய சுற்று சுற்றி விட்டுத் தான் சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு வரும்.
ஏனோ தெரியவில்லை.
சிலருக்கு சொல்வதை முகத்துக்கு முன் சொல்லத் தைரியமில்லை.
மனசில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த தூரத்து நட்சத்திரம் பதில் சொல்லிவிட்டது.
மீண்டும் புதிய உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தேன்.
தையெல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?
ஒரு நிறுவனம் என்றால் பலதரப்பட்டவர்களிருப்பார்கள்.
இணங்கித் தான் ஆக வேண்டும்.
அதிலும் வயதில் மூத்தவர்களிடம் சற்று தாழ்ந்து போனால் தான் அவர்களுக்கும் திருப்தி.

